செய்திகள்

அறந்தாங்கி அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

Published On 2017-12-14 14:21 GMT   |   Update On 2017-12-14 14:21 GMT
பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்த 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
அறந்தாங்கி:

அறந்தாங்கியை அடுத்த வண்ணியப்பிள்ளைவயல் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

அப்போது அங்கு வைரி வயலை சேர்ந்த கார்த்தி (வயது37), சங்கர் (33), வடுகாடு பகுதியைச் சேர்ந்த மாறன்(45),  கே.புதுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி (54), கீழாநிலைக்கோட்டை ராமசாமி (40), மேற்பனைக்காடு பகுதியை சேர்ந்த அப்துல்காதர் (40), முகமது முஸ்தபா (50) ஆகியோர் பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் சூதாடுவதற்காக வைத்திருந்த ரூ.73 ஆயிரத்து 280 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News