செய்திகள்
கந்தர்வக்கோட்டை அருகே ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
கந்தர்வக்கோட்டை அருகே மாணவ, மாணவிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிய ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கேட்டை அருகே நடுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 97 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளி ஆசிரியர் விமல் விஸ்வநாதன் (48) மாணவ, மாணவிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து அப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் காவல் ஆய்வாளர் மன்னர்மன்னன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தை கை விட்டனர்.
கந்தர்வக்கேட்டை அருகே நடுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 97 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளி ஆசிரியர் விமல் விஸ்வநாதன் (48) மாணவ, மாணவிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து அப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் காவல் ஆய்வாளர் மன்னர்மன்னன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தை கை விட்டனர்.