செய்திகள்

ஆண்டிமடம் அருகே கடன் தகராறில் வாலிபர் கைது

Published On 2017-12-08 15:59 IST   |   Update On 2017-12-08 15:59:00 IST
ஆண்டிமடம் அருகே ரூ.4 ஆயிரம் கடன் தகராறில் வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் சூரக்குழியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (27). இவரிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விளந்தை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கவுசிக்(21) என்பவர் ரூ.4ஆயிரம் கடன் பெற்றிருந்தார்.

கடனை திருப்பி கொடுக்காததால் நேற்று முன்தினம் பணத்தை கேட்டுள்ளார். கொடுக்க மறுக்கவே ராஜசேகர் கவுசிக்கை திட்டி தாக்கியதில் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் சப்-இன்ஸ்பெக்டர் கலிய பெருமாள் வழக்குபதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Similar News