தேவகோட்டை அருகே மது குடிக்கும் தகராறில் வாலிபர் குத்திக் கொலை
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகாவில் உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் மருது (வயது 20). கட்டிடத் தொழிலாளி.
அதே பகுதியில் உள்ள சின்னமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (26). கட்டிட வேலை செய்து வருகிறார்.
நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 24-ந்தேதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நடராஜபுரத்தில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்தபோது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் முத்துக் குமார் ஆத்திரம் அடைந்து தன்னிடம் இருந்த கத்தியால் மருதுவை குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
படுகாயம் அடைந்த மருதுவை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மருது பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மருதுவின் தாயார் அம்மாசெல்வி தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துக் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முகமதுஎசப் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மருதுவை தேடி வருகிறார்கள்.