செய்திகள்

காஞ்சீபுரத்தில் பெண் மர்ம மரணம்

Published On 2017-11-12 17:10 GMT   |   Update On 2017-11-12 17:10 GMT
காஞ்சீபுரத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் மர்மமான முறையில் இறந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம், மேற்கு ராஜவீதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் உயிருக்கு போராடியபடி கிடந்தார். பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக் டர் பழனி மற்றும் போலீசார் அவரை மீட்டு காஞசீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இறந்த பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவரது பெயர் நாகம்மாள் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இது குறித்து பெரியகாஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சீபுரம், ஆஸ்பத்திரி சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.     
Tags:    

Similar News