செய்திகள்

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

Published On 2017-11-07 12:29 IST   |   Update On 2017-11-07 12:30:00 IST
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அடுத்த சோமங்கலம் மலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் விவசாயி. இவர் மாடுகளை ஓட்டிக்கொண்டு மலைப்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரேவந்த இருசக்கர வாகனம் ராஜேந்திரன் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைமலைநகர் அடுத்த அஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிபதி. தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கொண்டமங்கலம் என்ற இடத்தில் வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக பொத்தேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News