செய்திகள்

இளையான்குடி அருகே வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2017-11-01 11:53 GMT   |   Update On 2017-11-01 11:53 GMT
இளையான்குடி அருகே திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை:

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள நல்லுகுறிச்சியைச் சேர்ந்தவர் விஜயராமன். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 21).

இவர் சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள துகவூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்தார்.

அங்கு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருஷ்ணவேணி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் கிருஷ்ணவேணி தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News