செய்திகள்

காரைக்குடியில் வெந்நீர் அண்டாவில் விழுந்து தொழிலாளி பலி

Published On 2017-10-30 23:20 IST   |   Update On 2017-10-30 23:21:00 IST
காரைக்குடியில் தொழிலாளி கால் தடுமாறி வெந்நீர் அண்டாவில் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரைக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் சுந்தர்(வயது 45). இவர் காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பேக்கரியில் முட்டைகளை அவிப்பதற்காக பெரிய அண்டாவில் தண்ணீரை சூடாக்கினார். பின்னர் முட்டைகள் வெந்துவிட்டனவா என்பதை பார்க்க அவர் ஆண்டாவை எட்டி பார்த்துள்ளார். அப்போது கால் தடுமாறிய சுந்தர் வெந்நீர் அண்டாவினுள் விழுந்துவிட்டார்.

வெந்நீரில் விழுந்ததால் சுந்தர் உடல் முழுவதும் வெந்து போனது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News