செய்திகள்

காரைக்குடியில் கந்து வட்டி வசூலித்தவர் கைது

Published On 2017-10-28 18:52 IST   |   Update On 2017-10-28 18:52:00 IST
காரைக்குடியில் பெண்ணிடம் கந்துவட்டி வசூலித்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை:

காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி முத்து (வயது45). இவர் காரைக்குடி தெற்கு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில் முருகேசன் என்பவரிடம் எனது கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்கு வட்டி கட்டி வந்தோம்.

இந்த நிலையில் கணவர் ஆறுமுகம் இறந்து விட்டார். அதன்பிறகு முருகேசன் கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து இன்ஸ்பெக் டர் பிரேம்ஆனந்த் விசாரணை நடத்தினார். தொடர்ந்து கந்துவட்டி வசூலித்த புகாரில் முருகேசனை கைது செய்தார்.

Similar News