செய்திகள்

பண்ருட்டியில் ஓடும் பஸ்சில் பயணி திடீர் மரணம்: போலீஸ் விசாரணை

Published On 2017-10-28 17:06 IST   |   Update On 2017-10-28 17:06:00 IST
பண்ருட்டியில் ஒடும் பஸ்சில் பிணமாக கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

வடலூரில் இருந்து இன்று காலை தனியார் பஸ் ஒன்று பண்ருட்டிக்கு வந்தது. பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர் பின்னர் ஒரு சீட்டில் முதியவர் ஒருவர் இறங்காமல் அமர்ந்து இருந்ததை கண்ட பஸ் கண்டக்டர் அவரை எழுப்பியுள்ளார்.

அப்போது அவர் இறந்து இருப்பதைகண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பஸ் கண்டக்டர் பண்ருட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பண்ருட்டி போலீசார் ஒடும் பஸ்சில் உயிரிழந்த முதியவர் உடலை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒடும் பஸ்சில் உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News