செய்திகள்

சிதம்பரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

Published On 2017-10-28 16:34 IST   |   Update On 2017-10-28 16:34:00 IST
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்மகாய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு சிதம்பரம் அருகே இளம்பெண் ஒருவர் இறந்துள்ளார்.

சிதம்பரத்தை அடுத்த அய்யனூர் மங்காகுளம் பகுதியை சேர்ந்தவர் மாலதி (வயது 22). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் அதிகரிக்கவே புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார். இன்று மதியம் மாலதி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார்.

Similar News