செய்திகள்

திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து திருடிய 4 வாலிபர்கள் கைது

Published On 2017-10-28 16:09 IST   |   Update On 2017-10-28 16:09:00 IST
திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து திருடியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை:

திருப்பத்தூர் தாலுகா எஸ்.வி.மங்கலம் அருகே உள்ள மாதவராயன் பட்டியை சேர்ந்தவர் பழனிக்குமார் (வயது43), விவசாயி. இவர் வீட்டின் கதவை பூட்டாமல் அருகில் உள்ள கடைக்கு சென்றார்.

அங்கிருந்து திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது 4 வாலிபர்கள் பீரோவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதனை கண்டு பழனிக்குமார் கூச்சலிட்டார்.

அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் வீடு புகுந்து திருட முயன்ற 4 பேரையும் பிடித்து எஸ்.வி.மங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சேதுராஜ் விசாரணை நடத்தி கைது செய்தார்.

விசாரணையில் கைதான 4 பேரின் பெயர்கள் முகமது காசிம் (35), சலீம் (22), காசிம் (23), முகமதுநாசர் (28) என தெரியவந்தது. மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள் கம்பளி விற்பதுபோல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் வேறு எங்காவது இதுபோல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News