செய்திகள்

மதகுபட்டி அருகே போலி பெண் டாக்டர் கைது

Published On 2017-10-28 15:55 IST   |   Update On 2017-10-28 15:55:00 IST
மதகுபட்டி அருகே போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை:

சிவகங்கை தாலுகா மதகுபட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட கே.சொக்கநாதபுரத்தில் ஓமியோபதி கிளினிக் நடத்தி வந்தவர் அமுதா (வயது46). இந்த கிளினிக்கில் ஊசி போடப்பட்டு மாத்திரை கொடுப்பதாக புகார்கள் வந்தன.

இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் விஜயன் மதமடக்கி மற்றும் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.

அப்போது கிளினிக் நடத்தி வந்த அமுதா 10-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு போலி டாக்டராக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக மதகுபட்டி போலீசில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் விஜயன் மதமடக்கி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் அமுதாவை கைது செய்தனர்.

இவர் காரைக்குடி அருகே உள்ள டி.டி.நகரில் வசித்து வருகிறார். இங்கிருந்துதான் தினமும் கிளினிக் சென்று வந்துள்ளார்.

Similar News