செய்திகள்
ரசாயன கலவையில் பழுக்க வைக்கப்பட்ட வாழை தார்கள் பறிமுதல்
திருப்பாச்சேத்தியில் ரசாயன கலவையை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட வாழை தார்களை ஆய்வில் கண்டுபிடித்து மாவட்ட கலெக்டர் லதா பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
திருப்புவனம்:
திருப்பாச்சேத்தி ஊராட்சி பகுதிகளில் கிழக்குத்தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு, படித்துறை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வந்த வாழைக்காய் மண்டியில் ரசாயன கலவையை பயன்படுத்தி செயற்கை முறையில் வாழைப்பழம் பழுக்க வைப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அங்கிருந்த அனைத்து வாழைத்தார்களையும் அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தினார். பின்னர் அவைகள் குழித்தோண்டி புதைக்கப்பட்டன. வாழைக்காய் மண்டி உரிமையாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார். டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி விரைவாக அனைத்து துப்புரவு பணிகளை முழுவீச்சில் செயல்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ பூவந்தி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருப்பாச்சேத்தி ஊராட்சி பகுதிகளில் கிழக்குத்தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு, படித்துறை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வந்த வாழைக்காய் மண்டியில் ரசாயன கலவையை பயன்படுத்தி செயற்கை முறையில் வாழைப்பழம் பழுக்க வைப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அங்கிருந்த அனைத்து வாழைத்தார்களையும் அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தினார். பின்னர் அவைகள் குழித்தோண்டி புதைக்கப்பட்டன. வாழைக்காய் மண்டி உரிமையாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார். டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி விரைவாக அனைத்து துப்புரவு பணிகளை முழுவீச்சில் செயல்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ பூவந்தி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.