செய்திகள்
கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் புதியவன் மீது வழக்கு போட்டு கைது செய்ததை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் அறிவுடை நம்பி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் செந்தில் வரவேற்றார். கடலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் நிர்வாகிகள் பாவாணன், ஜெகன், சுபாஷ், முரளி, தமிழருவி, ஜெயசீலன், வினோத்,தமிழரசன், சுரேஷ்பாபு மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் புதியவன் மீது வழக்கு போட்டு கைது செய்ததை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் அறிவுடை நம்பி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் செந்தில் வரவேற்றார். கடலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் நிர்வாகிகள் பாவாணன், ஜெகன், சுபாஷ், முரளி, தமிழருவி, ஜெயசீலன், வினோத்,தமிழரசன், சுரேஷ்பாபு மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.