செய்திகள்

கடலூரில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் எம்.சி.சம்பத்

Published On 2017-10-27 13:35 IST   |   Update On 2017-10-27 13:35:00 IST
கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
கடலூர்:

கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தப்படும்.

அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் எந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி குறைந்துள்ளது என கண்டறியப்படும். பின்னர் அந்த பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


சென்னையில் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை திறக்கப்பட உள்ளது. இங்கு 80 கம்பெனிகள் வர உள்ளன. இதன் மூலம் 10 ஆயிரம் பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெறுவர்.

மேலும் பாப்ஸ்கான், மோட்டோரோலா இன்னோவா உள்ளிட்ட பல கம்பெனிகள் புதியதாக வர உள்ளன. அதன் மூலம் வருகின்ற 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News