செய்திகள்

விருத்தாசலம் அருகே குளத்தில் விவசாயி பிணம்: கொலை செய்யப்பட்டாரா?

Published On 2017-10-26 21:36 IST   |   Update On 2017-10-26 21:36:00 IST
விருத்தாசலம் அருகே குளத்தில் பிணமாக மிதந்த விவசாயி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கோபுராபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி(வயது 40). விவசாயி. இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் அங்குள்ள குளத்தில் ஆண்பிணம் ஒன்று கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து சென்று குளத்தில் பிணமாக மிதந்த உடலை மீட்டனர். விசாரணையில் அவர் கோபுராபுரத்தை சேர்ந்த விவசாயி ரங்கசாமி என்பது தெரியவந்தது.

அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை குளத்தில் வீசி சென்றார்களா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News