செய்திகள்

பண்ருட்டி அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2017-10-26 11:21 GMT   |   Update On 2017-10-26 11:21 GMT
பண்ருட்டி அருகே இளம்பெண் விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகுமார். விவசாயி. இவரது மகள் அம்மு(வயது22). இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் எலி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அம்மு இறந்து விட்டார்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News