செய்திகள்

சேலையூர் அருகே 2 கடைகளில் கொள்ளை

Published On 2017-10-10 14:50 IST   |   Update On 2017-10-10 14:50:00 IST
சேலையூர் அருகே 2 கடைகளில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கரணை:

சேலையூரை அடுத்த செம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6-வது தெரு வேளச்சேரி மெயின் ரோட்டில் லேப்டாப் சர்வீஸ் கடை நடத்தி வருபவர் நாகராஜன். இரவு கடையை மூடிச் சென்றார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த லேப் டாப், டி.வி.டி. பிளேயர், ரூ. 1000 ரொக்கத்தை கொள்ளையடித்தனர்.

இதேபோல் அருகில் உள்ள மருந்து கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணப் பெட்டியில் இருந்த ரூ. 35 ஆயிரத்தையும் சுருட்டி சென்றுவிட்டனர்.

Similar News