செய்திகள்

மதுரவாயல் அருகே பூட்டை உடைத்து நகை திருட்டு

Published On 2017-10-07 14:38 IST   |   Update On 2017-10-07 14:38:00 IST
மதுரவாயல் அருகே பூட்டை உடைத்து நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

போரூர்:

மதுரவாயல் அருகே உள்ள தண்டலம் ஜெயாநகரை சேர்ந்தவர் சதீஷ் (40). இவரது மாமனார் நாகேஸ்வரன் (72). நாகேஸ்வரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு மேல்மாடியில் சென்று தூங்கி இருக்கிறார்.

இன்று காலையில் எழுந்து பார்த்தபோது கதவு பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 19 பவுன் நகை மற்றும் ரு.5 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்ததை பார்த்து திடுக்கிட்டார். இதுபற்றி மதுரவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News