செய்திகள்

நாகையில் கடலில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி - கலெக்டர் வழங்கினார்

Published On 2017-09-26 21:53 IST   |   Update On 2017-09-26 21:53:00 IST
நாகப்பட்டினத்தில் கடலில் உயிரிழந்த மீனவர்கள் 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினத்தில் கலெக்டர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 9 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 216 என மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டது.

கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையினையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தேன்மொழி, மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News