வேதாரண்யத்தில் ஆட்டோ- கார் அடித்து சேதம்: டிரைவர் கைது
வேதாரண்யம்:
வேதாரண்யம் வடக்கு வீதியில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஆட்டோ நிறுத்தகத்தில் வேதை பன்னீர்(43) என்பவர் ஆட்டோ நிறுத்தி ஓட்டி வந்தார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் அங்கு ஆட்டோ நிறுத்தக்கூடாது என மற்ற ஆட்டோ ஓட்டுனர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் வேறு இடத்திற்கு சென்றார்.
தற்போது மீண்டும் வேதை பன்னீர் வேதாரண்யம் வடக்கு வீதி, ஆட்டோ நிறுத்தகத்தில் தனது ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தினார். இதனால் இவருக்கும், மற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பன்னீர் இதற்கு காரணம் குமரேசன் (52) என்பவர்தான் எனக் கூறி அங்கு நிறுத்தியிருந்த காமராஜ் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவையும், குமரேசனுக்கு சொந்தமான கார் கண்ணாடியையும் அடித்து சேதப்படுத்தியதோடு அங்குள்ள ஒருவர் மீது மண்ணெண்ணையை ஊற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து குமரேசன் வேதாரண்யம் போலீஸில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் வழக்குபதிவு செய்து, வேதை பன்னீரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.