செய்திகள்

வேதாரண்யம் குடும்ப தகராறில் மாமனாரை தாக்கிய மருமகன் கைது

Published On 2017-09-15 11:45 GMT   |   Update On 2017-09-15 11:46 GMT
வேதாரண்யம் அருகே குடும்ப தகராறில் மாமனாரை தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம், நாகக்குடையான் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). இவரது மகள் சுசீலாவை அதே ஊரைச் சேர்ந்த முருகையன் மகன் கனகராசன் (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.

இந்நிலையில் சுசீலா 7 மாத கர்ப்பவதியாக இருப்பதால் வளைகாப்பு இட்டு, தகப்பனார் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். கடந்த 12-ந் தேதி நள்ளிரவு சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று சுசீலாவை அனுப்பி வைக்கும்படி கனகராசன் கேட்டுள்ளார். அப்போது காலையில் அழைத்து செல்லுங்கள் என்று அவர் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கனகராசன் மாமனார் சுப்பிரமணியனை தரக்குறைவாக பேசி வீடு புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி, அவரையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சுப்பிர மணியன் வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்குபதிவு செய்து கனகராசனை கைது செய்தார்.

Tags:    

Similar News