சென்னிமலை அருகே பால் வியாபாரி மனைவி தற்கொலை
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர், பாலப் பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். பால் வியாபாரி. இவரது மனைவி புஷ்பா (வயது46). இவர்களுக்கு கார்த்திக் (16) என்ற மகன் உள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக புஷ்பா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என தெரிகிறது.
சம்பவத்தன்று புஷ்பாவுக்கு வயிற்றுவலி அதிகரித்து உள்ளது. இதனால் வெறுப்படைந்த புஷ்பா வீட்டில் இருந்த செடிக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு புஷ்பாவை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறினார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.