செய்திகள்
ஈரோட்டில் விஷம் குடித்து இரும்பு வியாபாரி தற்கொலை
ஈரோட்டில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் இரும்பு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம், ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது46). இவரது மனைவி கோமதி.
பத்மநாபன் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு பணப் பிரச்சனையில் பத்மநாபன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பத்மநாபன் விஷம் குடித்துள்ளார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக பத்மநாபன் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி பத்மநாபன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு கருங்கல் பாளையம், ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது46). இவரது மனைவி கோமதி.
பத்மநாபன் இரும்பு வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு பணப் பிரச்சனையில் பத்மநாபன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு குடிப்பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பத்மநாபன் விஷம் குடித்துள்ளார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேல் சிகிச்சைக்காக பத்மநாபன் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி பத்மநாபன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.