செய்திகள்

ஈரோட்டில் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2017-09-03 19:04 IST   |   Update On 2017-09-03 19:04:00 IST
பெற்றோர் லேப்- டாப் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

ஈரோடு, மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஓருவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

அந்த மாணவி தனது படிப்பிற்காக லேப்-டாப் வாங்கி தர வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் வாங்கி தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு கொண்டார்.

சிகிச்சைக்காக அந்த மாணவியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் அழுதது பரிதாபமாக இருந்தது.

Similar News