செய்திகள்

பெருந்துறை அருகே ஆஸ்பத்திரிக்கு சென்ற பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்

Published On 2017-09-02 15:51 IST   |   Update On 2017-09-02 15:51:00 IST
பெருந்துறை அருகே ஆஸ்பத்திரிக்கு சென்ற பெண் மாயமானது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

பெருந்துறை அடுத்த விஜயமங்கலம், தாசம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது61). இவரது மனைவி பாலாமணி (55).

பாலாமணி உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று பாலாமணி ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த கதிர்வேல் பாலாமணியை பல்வேறு இடங்களில் தேடினார்.

எனினும் பாலாமணி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கதிர்வேல் பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து மாயமான பாலாமணியை தேடி வருகிறார். காணாமல் போன அன்று பாலாமணி மெருன் கலர் சேலை அணிந்திருந்தார்.

Similar News