செய்திகள்

வேதாரண்யம் அருகே மீன் கிடைக்காததால் மீனவர்கள் கலக்கம்

Published On 2017-08-29 22:28 IST   |   Update On 2017-08-29 22:28:00 IST
கடல் சீற்றம், காற்றின் வேகம் குறைந்த நிலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன் கிடைக்காததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம், கொள்ளபள்ளம் ஆகிய இடங்களை சேர்ந்த மீனவர்கள் பலர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றம், காற்றின் வேகம் குறைந்த நிலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன் கிடைக்கவில்லை.

இதனால் கலக்கம் அடைந்துள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ஆர்வமில்லாமல் உள்ளனர். சிலர் மட்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதன் எதிரொலியாக மீன் வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

Similar News