செய்திகள்
மயிலாடுதுறை அருகே விபத்து: வாலிபர் பலி
மயிலாடுதுறை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சித்தர்காடு பனந்தோப்பு தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் நந்தகுமார்(வயது 20). இவர் நேற்று கச்சேரி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த கார் மீது மோதி படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவகல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.