செங்காட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்
ஸ்ரீபெரும்புதூர்:
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பெரும்புதூர் செங்காட்டில் ஒன்றிய துணை செயலாளர் தினகரன் தலைமையில் பொதுகூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய பொருளாளர் பூவரசன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் தியாகராஜன், நிர்வாகிகள் கலைவடிவன், கட்சிப்பட்டு பழனி, சமத்துவன், ராமராஜன் முன்னிலை வகித்தனர். தமிழரசன், சுடர்வளவன், விஜய், இன்பசேகரன், ஒருங்கிணைத்தனர். காஞ்சீபுரம் மைய மாவட்ட செயலாளர் தமிழரசன், தொகுதி செயலாளர் மேனகா தேவி கோமகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில நிர்வாகிகள் சிபிசந்தர், நீலவானத்து நிலவன், திராவிட மணி ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் கராத்தே பாண்டி, தளபதி சுந்தர், கெளதம், சித்தார்த்தன், யோகா, தமிழ்வளவன், ஈசன், சாந்தன், வெற்றி வளவன், ரவி, ஸ்ரீதர், மணிகண்டன், துளசி, இளங்கோவன், வீரராகவன், பிரபாகரன், கிரி, முருகன், அய்யப்பன், அருண், குமார், ஈட்டி, ராஜிகுமார், முருகன், செந்தமிழன், கமல் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் விநாயகம் நன்றி கூறினார்.