செய்திகள்

டிரைவர் தூக்குப் போட்டு சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி- கள்ளக்காதலன் கைது

Published On 2017-08-23 14:56 IST   |   Update On 2017-08-23 14:56:00 IST
சேலையூர் அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்:

சேலையூரை அடுத்த சந்தோசபுரத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 31). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக இருந்தார். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை ராஜன் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலையூர் போலீசார் விசாரணை நடத்திய போது ராஜன் எழுதி வைத்து இருந்த கடிதம் சிக்கியது.

அதில், தனது தற்கொலை முடிவுக்கு மனைவி சீதாலட்சுமி, மற்றும் அவரது கள்ளக்காதலன் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் ஐவர்ராஜ் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சீதாலட்சுமி அவரது கள்ளக்காதலன் ஐவர்ராஜை கைது செய்தனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கைதான சீதாலட்சுமி போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில், “எனக்கும் ஐவர்ராஜிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த கணவர் ராஜன் கள்ளக்காதலை கைவிட கூறினார். இதற்கு நான் மறுத்தேன்.

மேலும் கணவரை பிரிந்து பனையூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன்.

இதுபற்றி நான் ஐவர்ராஜிடம் கூறினேன். அவர் கணவர் ராஜனை செல்போனில் பேசி மிரட்டினார் என்று கூறியுள்ளார்.

Similar News