செய்திகள்
நீலாங்கரையில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி
மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியானதால் நீலாங்கரையில் பரபரப்பு நிலவுகிறது.
சோழிங்கநல்லூர்:
நீலாங்கரையை அடுத்த வெட்டுவங்கேணி கற்பக விநாயகர் நகரைச் சேர்ந்தவர் பூங்காவனம் . இவரது மகள் வெண்ணிலா (13).
தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 3 நாட்களாக மாணவிக்கு காய்ச்சல் இருந்தது. இதற்கு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிச்சை பெற்றனர்.
நேற்று திடீரென்று வெண்ணிலா மயங்கி விழுந்தாள். உடனே மாணவியை சென்னை ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
வெண்ணிலாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலியானதால் நீலாங்கரையில் பரபரப்பு நிலவுகிறது.
அப்பகுதியில் சாக்கடை நீர் தேங்குவதால் கொசுக்கள் தொல்லை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.