செய்திகள்
கலெக்டர் சுரேஷ்குமார்

நாகையில் குறைதீர்க்கும் கூட்டத்தில் பார்வையற்ற 4 பயனாளிகளுக்கு கண்ணாடி. ஊன்றுகோல்: கலெக்டர் வழங்கினார்

Published On 2017-08-22 19:46 IST   |   Update On 2017-08-22 19:46:00 IST
நாகை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்ற 4 பயனாளிகளுக்கு கண்ணாடி மற்றும் ஊன்றுகோலை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 31 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 352 என மொத்தம் 383 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்ற 4 பயனாளிகளுக்கு கண்ணாடி மற்றும் ஊன்றுகோல்களையும், சமூகப் பாதுகாப்புத் திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகைக்கான ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தேன்மொழி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News