செய்திகள்

மடிப்பாக்கத்தில் 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை

Published On 2017-08-20 11:40 GMT   |   Update On 2017-08-20 11:40 GMT
மடிப்பாக்கத்தில் 2 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்:

மடிப்பாக்கம் மூவரசம் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள பால கணபதி கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை இன்று காலை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

இதேபோல் அருகில் உள்ள அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து உள்ளனர். அதில் பணம் குறைவாக இருந்ததால் கருவரை கதவை உடைத்து அங்கு பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Tags:    

Similar News