செய்திகள்
சென்னையில் விடிய விடிய மழை: 28 விமானங்கள் தாமதம்
சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 28 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆலந்தூர்:
சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
விமான ஓடு பாதையில் மழை நீர் தேங்கியதால் வெளிநாட்டில் இருந்து வந்த விமானங்கள் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து வானில் வட்டமடித்து இருந்தன.
ஊழியர்கள் ஓடு பாதையில் தண்ணீரை அகற்றிய பிறகு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரை இறங்கின.
மழையால் சென்னையில் இருந்து புறப்படும் விமான சேவை தாமதம் ஏற்பட்டது. சிங்கப்பூர், கொழும்பு, கோலாலம்பூர், துபாய், ஆங்காங், லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்கள், உள்நாட்டு விமானங்கள் என 28 விமானங்கள் புறப்படுவதில் 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.