செய்திகள்
அரியலூர் அருகே லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. சஸ்பெண்டு
அரியலூர் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி வாட்ஸ் அப் வீடியோ மூலம் சிக்கியதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள எரவான்குடியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேல்முருகன் (வயது 48) என்பவர் பணியாற்றி வந்தார். அவரிடம முருகன்கோட்டையை சேர்ந்த ஜான் என்பவர் தனது நிலத்திற்கு பட்டா கேட்டு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட வேல்முருகன், பட்டா கொடுப்பதற்கு ஜானிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஜான், வேல்முருகனுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். அதனை அங்கு மறைந்து இருந்த நபர் ஒருவர் தனது செல்போன் மூலம் படம் பிடித்து, வாட்ஸ் அப்பில் பரவவிட்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனா குமாரி, சம்பவம் குறித்து விசாரணை நடத்த வட்டாட்சியர் திருமாறனுக்கு உத்தரவிட்டார். அவர் ஜான் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன், மற்றும் உதவியாளர் ஆகி யோரிடம் விசாரணை நடத்தி அது குறித்த அறிக்கையை கோட்டாட்சியர் டீனா குமாரியிடம் சமர்ப்பித்தார். அதில் வேல்முருகன் லஞ்சம் வாங்கியது தெரியவரவே, அவரை சஸ்பெண்டு செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள எரவான்குடியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேல்முருகன் (வயது 48) என்பவர் பணியாற்றி வந்தார். அவரிடம முருகன்கோட்டையை சேர்ந்த ஜான் என்பவர் தனது நிலத்திற்கு பட்டா கேட்டு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட வேல்முருகன், பட்டா கொடுப்பதற்கு ஜானிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஜான், வேல்முருகனுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். அதனை அங்கு மறைந்து இருந்த நபர் ஒருவர் தனது செல்போன் மூலம் படம் பிடித்து, வாட்ஸ் அப்பில் பரவவிட்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனா குமாரி, சம்பவம் குறித்து விசாரணை நடத்த வட்டாட்சியர் திருமாறனுக்கு உத்தரவிட்டார். அவர் ஜான் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன், மற்றும் உதவியாளர் ஆகி யோரிடம் விசாரணை நடத்தி அது குறித்த அறிக்கையை கோட்டாட்சியர் டீனா குமாரியிடம் சமர்ப்பித்தார். அதில் வேல்முருகன் லஞ்சம் வாங்கியது தெரியவரவே, அவரை சஸ்பெண்டு செய்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.