செய்திகள்

திருவரங்குளம் அருகே பைக்கில் வைத்திருந்த பணம் கொள்ளை

Published On 2017-06-08 19:39 IST   |   Update On 2017-06-08 19:39:00 IST
திருவரங்குளம் அருகே பைக்கில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் 3 பேர் திருடி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவரங்குளம்:

திருவரங்குளம் அருகே உள்ள அழகம்பாள்புரத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 58). இவர் ஆலங்குடி அரசு வங்கியில் ஒரு லட்சம் பணம்  எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வைத்து பூட்டி விட்டு அங்கிருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.

திருவரங்குளம் கடை வீதியில் தனது பைக்கை விட்டு விட்டு கடைக்கு சென்றார்.  மர்ம நபர்கள் மூன்றுபேர் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.        

இது குறித்து ராமநாதன் ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார்  வழக்குபதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News