செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் 9-ந்தேதி நடைபெறுகிறது

Published On 2017-06-07 16:30 IST   |   Update On 2017-06-07 16:30:00 IST
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், அரியலூர் மற்றும் ஆண்டிமடம் வட்டங்களில் அம்மா திட்ட முகாம் 9-ந் தேதியன்று வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், அரியலூர் மற்றும் ஆண்டிமடம் வட்டங்களில் அம்மா திட்ட முகாம் 9-ந் தேதியன்று வருவாய் வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

முகாம் நடைபெறும் இடங்களின் விபரங்கள் பின்வருமாறு:-உடையார்பாளையம் வட்டத்தில்-தா.பழூர், உல்லியக்குடி கிராமங்களிலும், அரியலூர் வட்டத்தில்- சிறுவளுர் கிராமத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில்- கொடுக்கூர் கிராமத்திலும், நடைபெறுகிறது.

இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும்.பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத் திக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் தெரிவித்துள்ளார்.

Similar News