செய்திகள்

திருப்பத்தூர் அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2017-06-07 15:23 IST   |   Update On 2017-06-07 15:23:00 IST
திருப்பத்தூர் அருகே கல்லூரி சென்ற மாணவி மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள மேல ஆவணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லதா (வயது 48). இவரது மகள் சவுந்தர்யா (20).

இவர், திருப்பத்தூரில் உள்ள கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4-ந் தேதி சவுந்தர்யா வழக்கம் போல் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார்.

அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடு உள்பட பல இடங்களிலும் பெற்றோர் தேடினர். ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து நாச்சியார்புரம் போலீசில், லதா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து மாயமான சவுந்தர்யாவை தேடிவருகிறார்.

Similar News