விராலிமலை அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்து பெண் பலி
விராலிமலை:
சென்னையை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அவரது மனைவி குணசுந்தரி மற்றும் மகன் கார்த்திக், மகள் பிரியா, உறவினர்கள் சுப்புலட்சுமி , சவுமியா ஆகியோருடன் விருதுநகரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் விருதுநகர் சென்றார். காரை பாட்ஷா என்பவர் ஓட்டினார்.
இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கசவனூர் திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டு பாட்டை இழந்த கார் நடு ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் காய மடைந்தனர் . பலத்த காயமடைந்த குணசுந்தரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செவிலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் குணசுந்தரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.