செய்திகள்
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:
மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மாடுகள் வளர்ப்பதனால் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடிந்தது. தற்போது மாட்டிறைச்சிக்கு தடை செய்யப்பட்டதால் மாடுகளை விற்க முடியாமல் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.
எனவே இந்த சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டு மென வலியுறுத்தினர்.