செய்திகள்

வாலிபரின் தொல்லையால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-06-02 20:23 IST   |   Update On 2017-06-02 20:23:00 IST
கீரனூர் அருகே வாலிபரின் தொல்லையால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை  அடுத்துள்ள துவரவயல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவீரன், கூலி தொழிலாளி.  இவரது மகள் சசிகலா (வயது 20). இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த முத்துச்சாமி மகன் குணா (24). செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார்.

சசிகலா தினமும் மாலை கல்லூரியில் இருந்து ஊருக்கு வந்ததும் வீட்டுக்கு நடந்தே செல்வார். சம்பவத்தன்று நடந்து செல்லும் போது சசிகலாவை வழிமறித்த குணா, தனது மோட்டார் சைக்கிளில் ஏறும்படி தகராறு செய்துள்ளார்.

இது குறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் குணா மீது சசிகலாவின் பெற்றோர்  புகார் செய்தனர். இதையடுத்து குணாவை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த பிரச்சினையால் சசிகலாவுக்கு குணா தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சசிகலா வீட்டிற்கு சென்ற குணா, அவரை அவதூறாக பேசியுள்ளார். இதில் மனமுடைந்த சசிகலா வீட்டின் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள்  சாகுல், ரகுமான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இந்த சம்பவம் தொடர்பாக  குணா மற்றும் அவரது தந்தை முத்துசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News