செய்திகள்

சிவகங்கை-காளையார் கோவிலில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2017-06-02 15:33 IST   |   Update On 2017-06-02 15:33:00 IST
சிவகங்கை மற்றும் காளையார் கோவிலில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை:

சிவகங்கை நகர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவரது மனைவி விஜயலட்சுமி (26). இவர்களுக்கு அபிஸ்ரீ (5) என்ற மகளும், அபிஸ் (3) என்ற மகனும் உள்ளார்.

சம்பவத்தன்று விஜய லட்சுமி, 2 குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் சென்றார். அதன் பின்னர் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம், அன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் தங்கியிருந்து பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மகள் அமுதா (22). எம்.எஸ்.சி முடித்துள்ள இவர் வேலை தேடி வந்தார். இந்நிலையில் கடைக்கு சென்றுவிட்டு வருவதாக சென்ற அமுதா அதன்பின்னர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் பயன் இல்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் காளையார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்.

Similar News