செய்திகள்

செங்கல்பட்டு அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் மர்ம மரணம்

Published On 2017-05-31 10:04 GMT   |   Update On 2017-05-31 10:04 GMT
செங்கல்பட்டு அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் அலுவலகத்தில் மர்மமாக இறந்து கிடந்தார்.
செங்கல்பட்டு:

திண்டிவனத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திர சிட்டியில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வந்தார்.

இளையராஜா நேற்று முன்தினம் அலுவலகம் சென்றார். தனக்குரிய கண்ணாடி அறையில் இருந்தார். அவர் அங்கிருந்து வெளியே வராமல் இருந்தார்.

இந்த நிலையில் இளையராஜா தனது அலுவலகத்திலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. செங்கல்பட்டு டி.எஸ்.பி. மதிவாணன் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். இளையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இளையராஜா மரணம் தொடர்பாக இன்போசிஸ் அலுவலக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News