செய்திகள்

காஞ்சீபுரம் அருகே மணல் திருடிய 8 பேர் கைது

Published On 2017-05-30 14:41 IST   |   Update On 2017-05-30 14:41:00 IST
காஞ்சீபுரம் அருகே மணல் திருடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் தும்பவனம் கிராமம் மற்றும் விஷ்ணுநகர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியல் ஈடுபட்டிருந்தபோது மாட்டு வண்டிகளில் திருட்டு தனமாக மணல் கடத்திய தும்பவனம் மற்றும் நாகலூத்து மேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சங்கர், விக்ரம், பிரகாஷ், யுவராஜ், ஜெகன் ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோன்று சதுரங்க பட்டிணம் ஆற்று படுகை மற்றும் அனைக்கட்டு பைக்கரணை பகுதிகளில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட சிட்டிபாபு, சதீஷ் மற்றும் மனோகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News