செய்திகள்

ஆலங்குடி அருகே மயங்கி விழுந்து முதியவர் பலி

Published On 2017-05-17 17:41 IST   |   Update On 2017-05-17 17:41:00 IST
ஆலங்குடி அருகே மயங்கி விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவரங்குளம்:

ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக் கண்ணு (வயது90). சமையல் மாஸ்டர். இவர் தனது குடும்பத்துடன் ஆலங்குடி அண்ணா நகரில் வசித்து வருகிறார்.

இவர் தனது சொந்த வேலை காரணமாக கல்லாங்குடி சென்று திரும்பிய போது சாலையின் ஓரத்தில் உள்ள கருவேல மரக்காட்டில் மயங்கி விழுந்து இறந்து கிடந்தார்.

இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News