செய்திகள்
திருப்புவனம் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூட வேண்டும் - பெண்கள் கோரிக்கை
புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
சிவகங்கை:
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை மற்றும் கோவில்கள், பள்ளிக்கூடங்கள் அருகே இயங்கும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா என். வைரவன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது.
தற்போது இந்த கடையை அதே ஊரில் 50 மீட்டர் தூரத்தில் உள்ள சமத்துவபுரம் கல்லூரி மற்றும் கோவில் உள்ள பகுதியில் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். என். வைரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதேபோல் திருப்புவனம் தாலுகாயமனூர் சாலை வள்ளிக்கோட்டை காலனியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு அப்பகுதி பெண்கள் மனு கொடுத்துள்ளனர்.
இக்கடை அருகே பெண்கள் விடுதி, நர்சரி பள்ளி, பள்ளிவாசல் உள்ளதால் இந்த டாஸ்மாக் கடையை மூடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை மற்றும் கோவில்கள், பள்ளிக்கூடங்கள் அருகே இயங்கும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா என். வைரவன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது.
தற்போது இந்த கடையை அதே ஊரில் 50 மீட்டர் தூரத்தில் உள்ள சமத்துவபுரம் கல்லூரி மற்றும் கோவில் உள்ள பகுதியில் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். என். வைரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதேபோல் திருப்புவனம் தாலுகாயமனூர் சாலை வள்ளிக்கோட்டை காலனியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு அப்பகுதி பெண்கள் மனு கொடுத்துள்ளனர்.
இக்கடை அருகே பெண்கள் விடுதி, நர்சரி பள்ளி, பள்ளிவாசல் உள்ளதால் இந்த டாஸ்மாக் கடையை மூடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.