செய்திகள்

செந்துறையில் வருவாய் கிராம உதவியாளர் சங்க கூட்டம்

Published On 2017-04-26 14:50 GMT   |   Update On 2017-04-26 14:50 GMT
செந்துறை வட்டாட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் செந்துறை வருவாய் கிராம உதவியாளர் சங்க கூட்டம், மற்றும் நிர்வாகிகள் தேர்வு வட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

செந்துறை:

செந்துறை வட்டாட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் செந்துறை வருவாய் கிராம உதவியாளர் சங்க கூட்டம், மற்றும் நிர்வாகிகள் தேர்வு வட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் காமராசு, வட்டச் செயலாளர் ராயர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் பைரவன் சிறப்புரையாற்றினார்.

காலியாக இருந்த தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பதவிக்கு வெற்றிவேல் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இன்று நடைபெறும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அனைத்து துறை வருவாய் சங்கம் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத் தத்தில் முழுமையாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செந்துறை வட்டத்தை சேர்ந்த வருவாய் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பரம சிவம் வரவேற்றார்.

முடிவில் வட்ட துணை செயலாளர் காமதேவன் நன்றி கூறினார்.

Similar News