செய்திகள்

திருப்பத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் கொள்ளை

Published On 2017-04-26 10:26 GMT   |   Update On 2017-04-26 10:26 GMT
திருப்பத்தூர் அருகே வீட்டில் கதவை உடைத்து நகை-பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையத்து சென்றனர்.

சிவகங்கை:

திருப்பத்தூர் அருகே சாம்பா ஊராணியை அடுத்துள்ள மேல் கரை கிராமத்தை சேர்ந்தவர் இருளாயி (வயது 80). இவரது மகன் சென்னையில் வேலை பார்த்து வருவதால் இவர் மட்டும் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். சம்பவத் தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்குவந்த மர்ம மனிதன் பின்புறம் வழியாக வீட்டுக்குள் புகுந்து ரூ.85 ஆயிரம் மதிப்பிலான நகை, வெள்ளி குத்து விளக்குகள் மற்றும் பொருட்களை திருடி கொண்டு தப்பினார்.

இதுகுறித்து இருளாயி திருப்பத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News