செய்திகள்
சிவகங்கையில் இன்று 5-வது நாளாக போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிவகங்கையில் 5-வது நாளாக போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் அழைத்து பேச வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு விவசாய சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடந்து வருகிறது.
5-வது நாளான இன்று முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி, மாவட்டத்தலைவர் முத்து ராமலிங்கம், செயலாளர் விஸ்வநாதன், சாத்தையா, கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காத்திருக்கும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் இன்று காலை திடீரென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார், விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் அழைத்து பேச வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு விவசாய சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடந்து வருகிறது.
5-வது நாளான இன்று முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி, மாவட்டத்தலைவர் முத்து ராமலிங்கம், செயலாளர் விஸ்வநாதன், சாத்தையா, கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காத்திருக்கும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் இன்று காலை திடீரென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார், விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.